திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். நீண்ட வருடங்களாக அவருக்கென ஒரு தனி பாணியில் படங்களில் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் முதன் முதலில் உருவான 'பரோஸ் 3டி' படம் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியானது.
ஆனால், படத்திற்கு கேரளாவிலேயே வரவேற்பு கிடைக்கவில்லை. மோகன்லால் நடித்து வெளிவந்த படங்களில் பெரிய பிளாப் படமாக அப்படம் அமைந்துவிட்டது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் கடந்த ஆறு நாட்களில் வெறும் 9 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி நஷ்டம் என்று சொன்னார்கள். இந்தப் படத்தின் நஷ்டத்தையும் சேர்த்தால் அது 800 கோடிக்கும் அதிகமாக வரும்.