என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். நீண்ட வருடங்களாக அவருக்கென ஒரு தனி பாணியில் படங்களில் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் முதன் முதலில் உருவான 'பரோஸ் 3டி' படம் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியானது.
ஆனால், படத்திற்கு கேரளாவிலேயே வரவேற்பு கிடைக்கவில்லை. மோகன்லால் நடித்து வெளிவந்த படங்களில் பெரிய பிளாப் படமாக அப்படம் அமைந்துவிட்டது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் கடந்த ஆறு நாட்களில் வெறும் 9 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி நஷ்டம் என்று சொன்னார்கள். இந்தப் படத்தின் நஷ்டத்தையும் சேர்த்தால் அது 800 கோடிக்கும் அதிகமாக வரும்.