இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் |

ஜெமினி ஸ்டுடியோ மூலம் ஏராளமான படங்களை தயாரித்த எஸ்.எஸ்.வாசன் ஆரம்பத்தில் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தார். அவருக்கு ஒரு ஸ்டூடியோ நடத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அப்போதைய பிரபலமான இயக்குனர் கே.சுப்பிரமணியம் நடத்தி வந்த மோசன் பிக்சர்ஸ் கம்பெனி ஏலத்துக்கு வந்த போது அதனை எஸ் எஸ் வாசன் வாங்கி 'ஜெமினி ஸ்டுடியோ' என்று பெயர் மாற்றினார்.
இந்த ஸ்டூடியோவில் முதலில் தயாரான திரைப்படம் 'மதன காமராஜன்'. இந்த படத்தை திண்டுக்கல்லை சேர்ந்த 20 தொழிலதிபர்கள் இணைந்து தயாரித்தார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியிலேயே நின்றது. இதனால் அந்தப் படத்தை தானே தயாரிக்க முன் வந்தார் வாசன்.
இந்த படத்தின் மூலம் தயாரிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட வாசன், அதன் பிறகு ஏராளமான படங்களை தயாரித்தார். இந்த படம் நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டது. 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சீனி சடகோபன், கேஎல்வி வசந்தா, என்.கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு, டி.எஸ். துரைராஜ் எம்.டி.ராஜம்மா உள்பட பலர் நடித்திருந்தனர். பி.என். ராவ் என்பவர் இயக்கியிருந்தார்.
ஒரு ஓவியத்தில் உள்ள அழகான பெண்ணை பார்க்கும் இளவரசன் அந்தப் பெண்ணைத்தான் மணப்பெண் என்று பிடிவாதமாக இருந்து மனநலம் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணை தேடி கண்டுபிடித்து அவனுக்கு மனம் முடித்து வைப்பது மாதிரியான கதை. படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது . ஜெமினி ஸ்டுடியோவும் தொடர்ந்து படங்களை தயாரிக்க தொடங்கியது.