மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
திருவனந்தபுரம் : மலையாள நடிகர் திலீப் சங்கர் 54, திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர். இவர் ஏராளமான மலையாள படங்களிலும், 'டிவி' தொடர்களிலும் நடித்துள்ளார். டிச.19ம் தேதி முதல், பஞ்சாக்னி தொடர் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.
நேற்று சக நடிகர்கள் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், நடிகர் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்த்தபோது உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ஊழியர்கள் உதவியுடன் அறையை திறந்து பார்த்தபோது, நடிகர் திலீப் சங்கர் சடலமாக கிடந்தார். இது பற்றி அறிந்து விரைந்து வந்த போலீசார் திலீப் சங்கர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறப்புக்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.