45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் நடித்துள்ள படம் 'மேக்ஸ்'. கன்னடத்தில் திரைக்கு வந்துள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் நாளை வெளிவருகிறது. இதன் தமிழ் பதிப்பு டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுதீப், தயாரிப்பாளர் எஸ்.தாணு, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கிச்சா சுதீப் பேசும்போது “அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் அற்புதமான கதையில் உருவான படம் இது. ஆக்ஷன் பிரியர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். தமிழில் தாணு வெளியிடுகிறார். 'காக்க காக்க' படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது ஒரு பைசாகூட அதற்காக பெற்றுக் கொள்ளவில்லை. அவர் போன்ற நல்ல தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னடத்திற்கு வரவேண்டும். இது எனது வேண்டுகோள்'' என்றார்.