நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் நடித்துள்ள படம் 'மேக்ஸ்'. கன்னடத்தில் திரைக்கு வந்துள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் நாளை வெளிவருகிறது. இதன் தமிழ் பதிப்பு டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுதீப், தயாரிப்பாளர் எஸ்.தாணு, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கிச்சா சுதீப் பேசும்போது “அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் அற்புதமான கதையில் உருவான படம் இது. ஆக்ஷன் பிரியர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். தமிழில் தாணு வெளியிடுகிறார். 'காக்க காக்க' படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது ஒரு பைசாகூட அதற்காக பெற்றுக் கொள்ளவில்லை. அவர் போன்ற நல்ல தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னடத்திற்கு வரவேண்டும். இது எனது வேண்டுகோள்'' என்றார்.