ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் |

தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் 'தெறி'. இந்த படத்தை அட்லி இயக்கி இருந்தார். தற்போது தெறி படத்தை ஹிந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். இதில் விஜய் நடித்த ரோலில் வருண் தவானும், சமந்தா நடித்த ரோலில் கீர்த்தி சுரேசும் நடித்துள்ளார்கள். இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது காதலரை கைபிடித்த கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பேபி ஜான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''பேபி ஜான் படம் தெறி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் ஹிந்தி பதிப்புக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதோடு தெறி படத்தில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். என்றாலும் அவரது கதாபாத்திரத்தை நான் துணிச்சலாக ஏற்று நடித்தேன். அவரைப் போன்று நம்மால் நடிக்க முடியுமா என்று நான் பயப்படவில்லை. அப்படி நடித்ததின் காரணமாக இப்போது பேபி ஜான் படத்தில் என்னுடைய கேரக்டரும் மிகச் சிறப்பாக வந்துள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.