சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் புஷ்பா 2. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தார்கள். ஒரு நாள் சிறையில் இருந்து விட்டு மறுநாள் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து தனது வீட்டுக்கு அல்லு அர்ஜுன் சென்றபோது வீட்டு வாசலில் அவரது மனைவி அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார் சமந்தா. அதோடு அந்த வீடியோவை வெளியிட்டிருந்த அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா ரெட்டி, நான் அழவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் சமந்தாவோ, அந்த வீடியோவுக்கு ஆனந்த கண்ணீர் வடிக்கும் எமோஜிகளை இணைத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




