‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் புஷ்பா 2. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தார்கள். ஒரு நாள் சிறையில் இருந்து விட்டு மறுநாள் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து தனது வீட்டுக்கு அல்லு அர்ஜுன் சென்றபோது வீட்டு வாசலில் அவரது மனைவி அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார் சமந்தா. அதோடு அந்த வீடியோவை வெளியிட்டிருந்த அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா ரெட்டி, நான் அழவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் சமந்தாவோ, அந்த வீடியோவுக்கு ஆனந்த கண்ணீர் வடிக்கும் எமோஜிகளை இணைத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.