ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
80,90 காலகட்டத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் பி. வாசு. இவரின் மகன் சக்தி தொட்டால் பூ மலரும், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். பெரிதளவில் அவர் கதாநாயகனாக வெற்றி பெறவில்லை.
அதன்பிறகு சிவலிங்கா, ஏழு நாட்கள் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் 34வது படத்தில் சக்தி நடிக்கிறார். படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.