'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

‛அமரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படங்கள் தவிர்த்து சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் அவர் நடிக்கிறார். சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு படம் தான் சிவகார்த்திகேயனுக்காக இவரின் 25வது படமாக உருவாகிறது. படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. நேற்று முதல் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, டான் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. பின்னர் அவர் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக அதர்வா நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் நேற்று படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன் உடன் ஜெயம் ரவி, அதர்வா இருவரும் பங்கேற்றனர். அதோடு படத்தின் அறவிப்பிலும் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயம் ரவியும் இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மேலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்து தமிழில் அறிமுகமாகிறார். தெலுங்கில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா தற்போது தமிழில் களமிறங்குகிறார்.




