பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
கோவில்களுக்குள்ளும், திருமண விழாக்களுக்குள்ளும் இருந்த நாதஸ்வரத்தை பொது வெளியில் மேடையேற்றி புகழ்பெற வைத்தவர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை. நீண்ட தலைமுடி சட்டை அணியாத தோற்றத்துடன் நாதஸ்வரம் வாசித்தபோது முதன்முதலாக கிராப் வைத்துக் கொண்டு கோட், ஷர்வாணி அணிந்து வாசித்தார். நாதஸ்வரத்துக்கு தம்புரா, வீணை, மிருதங்கம் ஆகியவற்றை இணை கருவிகளாக்கினார்.
இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் அடைந்தபோது அதிகாலையில் இந்தியா முழுக்க வானொலியில் கேட்டது இவரது மங்கல நாதஸ்வர இசையைத்தான். முதன்முதலாக நாதஸ்வர இசை, இசைதட்டுகளாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்றதும் இவரது இசையால்தான். இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை ஒரு படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒன்று.
எல்லீஸ் ஆர்.டங்கன் கவி காளமேகத்தின் வாழ்க்கையை ‛காளமேகம்' என்ற பெயரில் திரைப்படமாக்கியபோது அந்த கேரக்டரில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளைதான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அவரை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார். இந்த படத்தில் எஸ்.பி.எல்.தனலட்சுமி, காளி என்.ரத்னம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் வெற்றி பெறவில்லை. தனது இயல்புக்கு சினிமா சரிவராது என்பதை புரிந்து கொண்ட ராஜரத்தினம் பிள்ளையும் அதன்பிறகு நடிக்கவில்லை. முன்னதாக அவர் தியாகராஜ பாகவதர் நடித்த 'திருநீலகண்டர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ஒரு பாடலும் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.