ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை |
சென்னை: நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த, எழுத்தாளரும், தேசிய விருது பெற்ற இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி இன்று (டிச.,06) காலமானார். அவருக்கு வயது 77.
எழுத்தாளரும், இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி, இன்று(டிச., 6) காலை காலமானார்.
கடந்த 1979ல் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான 'குடிசை' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபாரதி. பத்திரிகையாளராக இருந்து சினிமா துறைக்கு வந்தவர். வணிக சினிமா எடுக்க விரும்பாமல், யதார்த்தமான கதைகளைக் கொண்ட மாற்று சினிமா மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டவர்.
இவரது இயக்கத்தில் 'குடிசை', 'ஊமை ஜனங்கள்', 'ரெண்டும் ரெண்டும் அஞ்சு', உச்சி வெயில்', 'நண்பா நண்பா', 'குருஷேத்திரம்', 'புத்திரன்' ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவர் இயக்கிய குடிசை படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, பல்வேறு விருதுகளையும் பெற்றது.
கடைசியாக 2010ம் ஆண்டு 'புத்திரன்' என்ற படத்தை இயக்கினார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.