சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சென்னை: நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த, எழுத்தாளரும், தேசிய விருது பெற்ற இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி இன்று (டிச.,06) காலமானார். அவருக்கு வயது 77.
எழுத்தாளரும், இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி, இன்று(டிச., 6) காலை காலமானார்.
கடந்த 1979ல் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான 'குடிசை' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபாரதி. பத்திரிகையாளராக இருந்து சினிமா துறைக்கு வந்தவர். வணிக சினிமா எடுக்க விரும்பாமல், யதார்த்தமான கதைகளைக் கொண்ட மாற்று சினிமா மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டவர்.
இவரது இயக்கத்தில் 'குடிசை', 'ஊமை ஜனங்கள்', 'ரெண்டும் ரெண்டும் அஞ்சு', உச்சி வெயில்', 'நண்பா நண்பா', 'குருஷேத்திரம்', 'புத்திரன்' ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவர் இயக்கிய குடிசை படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, பல்வேறு விருதுகளையும் பெற்றது.
கடைசியாக 2010ம் ஆண்டு 'புத்திரன்' என்ற படத்தை இயக்கினார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.