படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தமிழ் சினிமாவில் யதார்த்த இயக்குனர்களில் ஒருவர் ஜெயபாரதி, முதன் முதலான சென்னை சேரிப்பகுதி மக்களின் வாழ்க்கையை 'குடிசை' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியதால் 'குடிசை ஜெயபாரதி' என்றே இப்போதும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் சினிமா விமர்சகராக இருந்த ஜெயபாரதி கே.பாலச்சந்தரின் படங்களை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு நாள் ஜெயபாரதியை அழைத்து கடிந்து கொண்ட கே.பாலச்சந்தர் “நல்ல படம் எடுக்கிறது எப்படின்னு எனக்கு சொல்லித் தரமுடியுமா?” என்று கோபமாக கேட்டார். “சொல்லித் தருவதென்ன எடுத்து காட்டுகிறேன்” என்று சவால்விட்டு கிரவுண்ட் பண்டிங் முறையில் அவர் எடுத்த படம்தான் 'குடிசை'.
அதன்பிறகு ஒரு நாள் அவரை அழைத்து பாராட்டிய கே.பாசலச்சந்தர். “சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டியே” என்று பாராட்டினார். அந்த படத்தின் சாயலில்தான் அவர் 'தப்பு தாளங்கள்' படத்தை பின்னாளில் இயக்கினார். இதனால் கே.பாலச்சந்தருக்கும் ஜெயபாரதிக்கும் ஆழமான நட்பு ஏற்பட்டது.
ஒருமுறை “உன்னோட கண்கள் தீர்க்கமானவை. நீ ஏன் என் படத்தில் நடிக்கக் கூடாது? ரெண்டு ஸ்டில்ஸ் எடுத்துட்டுவா” என்றார். ஆனால் ஜெயபாரதி அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. “நான் உங்கள் படத்தை விமர்சிப்பதில் இருந்தும், நான் படம் இயக்குவதில் இருந்தும் என்னை திசை திருப்ப பார்க்கிறீர்கள்” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அந்த படம் 'மூன்று முடிச்சு'. ஜெயபாரதி மறுத்து ஒதுங்கியதால் ரஜினி நடித்தார். வருமானம் இல்லாவிட்டாலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காத ஜெயபாரதிக்கு இன்று 75வது பிறந்த நாள்.