ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் |
தமிழ் சினிமாவில் யதார்த்த இயக்குனர்களில் ஒருவர் ஜெயபாரதி, முதன் முதலான சென்னை சேரிப்பகுதி மக்களின் வாழ்க்கையை 'குடிசை' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியதால் 'குடிசை ஜெயபாரதி' என்றே இப்போதும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் சினிமா விமர்சகராக இருந்த ஜெயபாரதி கே.பாலச்சந்தரின் படங்களை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு நாள் ஜெயபாரதியை அழைத்து கடிந்து கொண்ட கே.பாலச்சந்தர் “நல்ல படம் எடுக்கிறது எப்படின்னு எனக்கு சொல்லித் தரமுடியுமா?” என்று கோபமாக கேட்டார். “சொல்லித் தருவதென்ன எடுத்து காட்டுகிறேன்” என்று சவால்விட்டு கிரவுண்ட் பண்டிங் முறையில் அவர் எடுத்த படம்தான் 'குடிசை'.
அதன்பிறகு ஒரு நாள் அவரை அழைத்து பாராட்டிய கே.பாசலச்சந்தர். “சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டியே” என்று பாராட்டினார். அந்த படத்தின் சாயலில்தான் அவர் 'தப்பு தாளங்கள்' படத்தை பின்னாளில் இயக்கினார். இதனால் கே.பாலச்சந்தருக்கும் ஜெயபாரதிக்கும் ஆழமான நட்பு ஏற்பட்டது.
ஒருமுறை “உன்னோட கண்கள் தீர்க்கமானவை. நீ ஏன் என் படத்தில் நடிக்கக் கூடாது? ரெண்டு ஸ்டில்ஸ் எடுத்துட்டுவா” என்றார். ஆனால் ஜெயபாரதி அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. “நான் உங்கள் படத்தை விமர்சிப்பதில் இருந்தும், நான் படம் இயக்குவதில் இருந்தும் என்னை திசை திருப்ப பார்க்கிறீர்கள்” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அந்த படம் 'மூன்று முடிச்சு'. ஜெயபாரதி மறுத்து ஒதுங்கியதால் ரஜினி நடித்தார். வருமானம் இல்லாவிட்டாலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காத ஜெயபாரதிக்கு இன்று 75வது பிறந்த நாள்.