காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
மாற்று சினிமாவை முன்னெடுத்தவர்களில் முக்கியமானர்கள் கே.பாலச்சந்தர், ருத்ரையா, ஜெயபாரதி. சிறந்த ஆங்கில அறிவு மிக்க ஜெயபாரதி அந்த காலத்திலேயே உலக படங்களை தேடித் தேடிச் சென்று பார்த்தவர். பிரபலமான ஆங்கில பத்திரிகை ஒன்றில் சினிமா விமர்சகராக இருந்தார். அப்போது அவர் எல்லோருமே கொண்டாடிய கே.பாலச்சந்தரின் படங்களை கிழித்து தொங்கவிட்டார். இதனால் பாலச்சந்தருக்கு ஜெயபாரதி மீது கடும் கோபம்.
ஒரு நாள் அவரை தன் அலுவலத்திற்கு அழைத்த கே.பாலச்சந்தர். “என்னய்யா எந்த மாதிரி படம் எடுத்தாலும் குறை சொல்றியே... நீயே ஒரு நல்ல படம் எடுத்து இப்படித்தான் படம் எடுக்கணும்னு சொல்லேன்” என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெயபாரதி. “உங்க சவால நான் ஏத்துக்குறேன். நானே ஒரு படம் எடுத்து காட்டுகிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினார். அப்போது பாலச்சந்தர் “படம் எடுக்கிறதுக்கு லட்சக் கணக்குல பணம் வேணும் தெரியுமா?” என்றார். “நான் மக்களுக்காக படம் எடுக்குறேன். அதற்கான பணத்தை நான் அவர்கள்கிட்டேயே வாங்கிக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இந்த சவாலில் பிறந்ததுதான் 'குடிசை' படம். நடுத்தர மக்கள் பற்றி படம் வந்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் வாழும் சேரி மக்களின் வாழ்க்கை சொன்ன படம் இது. இதில் நாயகனாக டெல்லி கணேசும், நாயகியாக கமலா காமேசும் நடித்தனர்.
பாலச்சந்தரை எதிர்த்து படம் எடுப்பதால் அப்போதுள்ள நடிகைகள் இவரது படத்தில் நடிக்க தயங்கினர். அவர்கள் கேட்கும் சம்பளத்தையும் இவரால் கொடுக்க முடியவில்லை. அப்போது இவரது நண்பராக இருந்தவர்தான் மயிலாப்பூர் காமேஷ். அவர் இசை கச்சேரிகள் நடத்திக் கொண்டிருந்தார். காமேசும் சேர்ந்துதான் குடிசை படத்திற்கு நாயகி தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது சாப்பாடு பரிமாறியவர் காமேஷ் மனைவி கமலா. அவரை கவனித்த ஜெயபாரதி கமலாதன் என் படத்தின் நாயகி என்று அப்போதே முடிவு செய்து அவரை நடிக்க வைத்தார்.
படம் நல்ல வரவேற்பை பெற்றது. விருதுகள் பல பெற்றது. சாதாரண ஜெயபாரதி 'குடிசை ஜெயபாரதி' ஆனார். பின்னாளில் இதுகுறித்து பேசிய கே.பாலச்சந்தர். “அவன் ஒரு படைப்பாளிங்றது அவன் எழுத்துகள்லேருந்து நான் புரிஞ்சுகிட்டேன். அவன்கிட்டேருந்து ஒரு படைப்பு வெளியில வரணும்னா அவனை கோபப்படுத்தணும்னுதான் அவனை அழைத்து பேசினேன். என் திட்டம் சக்சஸ் ஆயிடுச்சு” என்று கூறினார்.