கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நடிகர் சந்தானம் முதலில் விஜய் டிவியின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி உச்சத்தில் வலம் வந்தார். அதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சந்தானம் முதல் முறையாக படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தானமே இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான கதை எழுதுவதற்கான பணியை தற்போது துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் இயக்குனர் டிகே இயக்கத்தில் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம்.