படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் பற்றி தெரியும், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சரோஜா, குட்டி பத்மினி, ஷாலினி இப்படி பலர். ஆனால் நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் 'செங்கோட்டை கங்காதர கிட்டப்பா' என்கிற பி.ஜி.கிட்டப்பா.
அவரது குடும்பமே நாடக குடும்பம்தான். 1911ம் ஆண்டு கொட்டம்பட்டியில் 'நல்லதங்காள்' நாடகம் நடைபெற்றது. அதில் கிட்டப்பாவின் சகோதரரான செல்லப்பா பெண்வேடமிட்டு நல்லதங்காளாக நடித்தார். நல்லதங்காளின் குழந்தைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா. அதுதான் நாடக உலகில் கிட்டப்பாவின் முதல் பிரவேசம். அடுத்த வருடம் மதுரை டவுன்ஹாலில் நடந்த ஒரு நாடகத்தில், 5 வயது சிறுவனான கிட்டப்பா பாடி நடித்தார். அதே டவுன் ஹாலில் நடந்த மற்றொரு நாடகத்தில் பாதுஷாவின் மகனாக நடித்தார்.
5 வயதில் மேடைப்பிரவேசம் செய்த கிட்டப்பா, தனது 6வது வயதில் சிங்கப்பூர் சென்று சில நாடகங்களில் நடித்தார். பின்பு இலங்கை சென்று நடித்தார். 12வது வயதில் கன்னையா நாடக கம்பெனியில் சேர்ந்தார். அதன் பிறகு சிறப்பு நாடகங்களில் நடித்த அவர் பின்னர் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார்.