'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை |

வெள்ளை ஆடை, கைகட்டி நிற்கும் பணிவு, அதிர்ந்து பேசாத குரல் இதுதான் ஏவிஎம்.சரவணன். 100 படங்களுக்கு மேல் தயாரித்தும் எந்த ஆர்ப்பாட்டமோ, அகங்காரமோ இல்லாத அமைதி கடல். ஏவி.மெய்யப்ப செய்டியார் மறைந்தபோது இத்தனை பெரிய நிறுவனத்தை யார் கட்டி காப்பது என்ற கேள்வி எழுந்தபோது கம்பீரமாக அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்.
அன்றைக்கு ஏவிம்மை விட்டு விலகி இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆரை நிறுவனத்திற்குள் கொண்டு வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அர்ஜுன், கே.பாக்யராஜ் என அடுத்த தலைமுறை ஹீரோக்களையும் கொண்டு வந்தவர். ஓப்பனிங் சாங், ஹீரோ என்ட்ரி, இன்டர்வல் பிளாக், மூணு ரீலுக்கு ஒரு பாடல், ஒரு சண்டை, பரபரப்பான கிளைமாக்ஸ் என கமர்சியல் சினிமாவை வடிவமைத்தவர்.
ஏவிஎம் நிறுவனத்தை காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவர். அன்றைய தேதியில் பெரிய பட்ஜெட் படமாக 'சிவாஜி'யை உருவாக்கினார். ரஜினி, ஷங்கர் என்ற இரு பெரும் ஜாம்பவான்களை இணைத்து சாதனை படைத்தார். தற்போது சினிமா தயாரிக்கவில்லை என்றாலும் ஏவிஎம் நிறுவனத்தின் சில பகுதிகளை அவரது சகோதரர்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தினாலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை இப்போதும் சினிமாவிற்காக கொடுத்து வருகிறவர். ஓடிடி வெப் தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆல்பங்கள் என காலத்துக்கேற்ற மாற்றத்தை கொண்டு வந்தவர்.
இன்று அவருக்கு 84வது பிறந்த நாள். சற்று உடல்நலக்குறைவுடன் இருக்கும் அவர் மீண்டும் ஏவிஎம் வளாகத்திற்குள் ராஜநடை போட வாழ்த்துவோம்.