வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‛தளபதி' படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. அதேபோன்றுதான் ‛நாயகன்' படத்திற்கு பிறகு கமலை வைத்து எந்த படமும் இயக்காமல் இருந்த மணிரத்னம் தற்போது அவர் நடிப்பில் ‛தக்லைப்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படியான நிலையில் கமலை தொடர்ந்து அடுத்து ரஜினியை வைத்தும் மணிரத்னம் ஒரு படம் இயக்குவதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. அந்த நேரத்தில் அதுகுறித்து சுஹாசினி மணிரத்னத்திடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛ரஜினி -மணிரத்னம் இணைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை,' என்று பதில் கொடுத்திருந்தார். ஆனபோதிலும் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து மணிரத்னம் ஒரு படம் இயக்கப் போவதாகவும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளின் போது அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
மேலும் ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் -2 படத்தின் புரோமோ வீடியோ மற்றும் கூலி படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.