ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‛தளபதி' படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. அதேபோன்றுதான் ‛நாயகன்' படத்திற்கு பிறகு கமலை வைத்து எந்த படமும் இயக்காமல் இருந்த மணிரத்னம் தற்போது அவர் நடிப்பில் ‛தக்லைப்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படியான நிலையில் கமலை தொடர்ந்து அடுத்து ரஜினியை வைத்தும் மணிரத்னம் ஒரு படம் இயக்குவதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. அந்த நேரத்தில் அதுகுறித்து சுஹாசினி மணிரத்னத்திடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛ரஜினி -மணிரத்னம் இணைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை,' என்று பதில் கொடுத்திருந்தார். ஆனபோதிலும் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து மணிரத்னம் ஒரு படம் இயக்கப் போவதாகவும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளின் போது அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
மேலும் ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் -2 படத்தின் புரோமோ வீடியோ மற்றும் கூலி படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.