செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‛தளபதி' படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. அதேபோன்றுதான் ‛நாயகன்' படத்திற்கு பிறகு கமலை வைத்து எந்த படமும் இயக்காமல் இருந்த மணிரத்னம் தற்போது அவர் நடிப்பில் ‛தக்லைப்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படியான நிலையில் கமலை தொடர்ந்து அடுத்து ரஜினியை வைத்தும் மணிரத்னம் ஒரு படம் இயக்குவதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. அந்த நேரத்தில் அதுகுறித்து சுஹாசினி மணிரத்னத்திடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛ரஜினி -மணிரத்னம் இணைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை,' என்று பதில் கொடுத்திருந்தார். ஆனபோதிலும் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து மணிரத்னம் ஒரு படம் இயக்கப் போவதாகவும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளின் போது அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
மேலும் ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் -2 படத்தின் புரோமோ வீடியோ மற்றும் கூலி படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.