தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற திரைப்படம் வெளியானது. தெலுங்கையும் தாண்டி தென்னிந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த படம் பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு வருடங்களாகவே தயாராகி வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர்-5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அல்லு அர்ஜுனின் ஒரு ரசிகராக மட்டும் அல்லாமல் சக சினிமா நண்பராக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுனுக்கென ஸ்பெஷலாக வடிவமைத்த இரண்டு டீ ஷர்ட்களை அவருக்கு பரிசாக அளித்தார். அதில் ரவுடி புஷ்பா என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டு இருந்தது.
ரவுடி என்பது விஜய் தேவர கொண்டவை தெலுங்கு ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் பெயர். அதுமட்டுமல்ல அந்த ரவுடி என்கிற பெயரிலேயே துணி வியாபாரம் ஒன்றை ஏற்கனவே துவங்கி ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த வகையில் தனது ரவுடி கம்பெனியின் துணியிலேயே அல்லு அர்ஜுனுக்கு டீ சர்ட் தயார் செய்து கொடுத்து அவரது ரசிகர்களின் அன்பை பெற்றதுடன் தனது நிறுவனத்தையும் இலவசமாகவே புரமோட் செய்து கொண்டும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் என்றே சொல்லலாம்.