மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! |
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற திரைப்படம் வெளியானது. தெலுங்கையும் தாண்டி தென்னிந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த படம் பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு வருடங்களாகவே தயாராகி வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர்-5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அல்லு அர்ஜுனின் ஒரு ரசிகராக மட்டும் அல்லாமல் சக சினிமா நண்பராக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுனுக்கென ஸ்பெஷலாக வடிவமைத்த இரண்டு டீ ஷர்ட்களை அவருக்கு பரிசாக அளித்தார். அதில் ரவுடி புஷ்பா என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டு இருந்தது.
ரவுடி என்பது விஜய் தேவர கொண்டவை தெலுங்கு ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் பெயர். அதுமட்டுமல்ல அந்த ரவுடி என்கிற பெயரிலேயே துணி வியாபாரம் ஒன்றை ஏற்கனவே துவங்கி ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த வகையில் தனது ரவுடி கம்பெனியின் துணியிலேயே அல்லு அர்ஜுனுக்கு டீ சர்ட் தயார் செய்து கொடுத்து அவரது ரசிகர்களின் அன்பை பெற்றதுடன் தனது நிறுவனத்தையும் இலவசமாகவே புரமோட் செய்து கொண்டும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் என்றே சொல்லலாம்.