ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
தமிழில் திருடி, வீரமும் ஈரமும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா. மலையாளத்தில் தன்யா மேரி வர்கீஸ் என்ற பெயரில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஜான் ஜேக்கப் என்பரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
கணவர் ஜான் ஜேக்கப்பும், தன்யாவும் இணைந்து கட்டுமான நிறுவனம், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகவும், கூடுதல் வட்டி தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றி 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள போலீஸ், நடிகை தன்யா அவரது கணவர் ஜான் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர்கள் சிலரை செய்ததுது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் அவர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. நடிகை தன்யாவுககு சொந்தமான திருவனந்தபுரத்தில் உள்ள ரூ.1.56 கோடி மதிப்புள்ள சொத்து உள்பட அவர் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.