மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
கடந்த தீபாவளி ரிலீஸ் ஆக சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்களை பெற்றது. அதுமட்டுமல்ல திரையுலக பிரபலங்களும் மிகப்பெரிய அளவில் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் இந்த படம் பார்த்துவிட்டு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இரண்டு புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. அதில் ஒன்று தற்போது எடுக்கப்பட்டது. இன்னொரு புகைப்படம் சரியாக 12 வருடம் 2 மாதம் 1 நாள் 15 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ள ராஜ்குமார் பெரியசாமி, “ஐ லவ் யூ விஜய் சார்.. நன்றி.. நான் உங்களுக்காக ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்து வருகிறேன்.. கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்” என்றும் அதில் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களில் இயக்குனராக பணியாற்றி வந்த ராஜ்குமார் பெரியசாமி, கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அந்த படம் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்காத நிலையில் 7 வருடம் கழித்து இப்போது அதற்கெல்லாம் மொத்தமாக சேர்த்து அமரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசாக அளித்துள்ளது. அடுத்ததாக தனுஷ் நடிக்கும் அவரது 55 படத்தை இவர் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.