சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
3, வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. சமீபகாலமாக ஆன்மீகத்தில் தீவிரமாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினி பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று தரிசனம் சென்று வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக எம்பி கனிமொழிக்கும் தனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் , கனிமொழி அக்காவுக்கும் எனக்குமிடையே உள்ள உறவு மிகவும் அழகானது. எங்களுடைய நட்பு எங்கு தொடங்கியது எப்போது பழகினோம் என்பது தெரியாது. ஆனால் 20 ஆண்டுகளாக எங்களுக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. நான் எப்போது மன குழப்பத்தில் இருந்தாலும் உடனே அவருக்கு கால் பண்ணி தான் பேசுவேன். அதுமட்டுமில்லாமல் எங்கேயாவது முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் அவருடன் மட்டும் தான் சொல்லுவேன். அவர் எப்படி பிறந்ததிலிருந்தே அரசியலில் இருக்கிறாரோ அதேபோன்று நான் பிறந்ததிலிருந்தே சினிமாவில் இருக்கிறேன்.
அவருக்கு அரசியல் தவிர எதுவும் தெரியாது. அதே போல் எனக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, கனிமொழி அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனபோதிலும் நான் எந்த ஊர் கோவில்களுக்கு சென்றாலும் அவரை சார்ந்தவர்கள் தான் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.