ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! |

3, வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. சமீபகாலமாக ஆன்மீகத்தில் தீவிரமாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினி பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று தரிசனம் சென்று வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக எம்பி கனிமொழிக்கும் தனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் , கனிமொழி அக்காவுக்கும் எனக்குமிடையே உள்ள உறவு மிகவும் அழகானது. எங்களுடைய நட்பு எங்கு தொடங்கியது எப்போது பழகினோம் என்பது தெரியாது. ஆனால் 20 ஆண்டுகளாக எங்களுக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. நான் எப்போது மன குழப்பத்தில் இருந்தாலும் உடனே அவருக்கு கால் பண்ணி தான் பேசுவேன். அதுமட்டுமில்லாமல் எங்கேயாவது முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் அவருடன் மட்டும் தான் சொல்லுவேன். அவர் எப்படி பிறந்ததிலிருந்தே அரசியலில் இருக்கிறாரோ அதேபோன்று நான் பிறந்ததிலிருந்தே சினிமாவில் இருக்கிறேன்.
அவருக்கு அரசியல் தவிர எதுவும் தெரியாது. அதே போல் எனக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, கனிமொழி அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனபோதிலும் நான் எந்த ஊர் கோவில்களுக்கு சென்றாலும் அவரை சார்ந்தவர்கள் தான் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.