'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
3, வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. சமீபகாலமாக ஆன்மீகத்தில் தீவிரமாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினி பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று தரிசனம் சென்று வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக எம்பி கனிமொழிக்கும் தனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் , கனிமொழி அக்காவுக்கும் எனக்குமிடையே உள்ள உறவு மிகவும் அழகானது. எங்களுடைய நட்பு எங்கு தொடங்கியது எப்போது பழகினோம் என்பது தெரியாது. ஆனால் 20 ஆண்டுகளாக எங்களுக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. நான் எப்போது மன குழப்பத்தில் இருந்தாலும் உடனே அவருக்கு கால் பண்ணி தான் பேசுவேன். அதுமட்டுமில்லாமல் எங்கேயாவது முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் அவருடன் மட்டும் தான் சொல்லுவேன். அவர் எப்படி பிறந்ததிலிருந்தே அரசியலில் இருக்கிறாரோ அதேபோன்று நான் பிறந்ததிலிருந்தே சினிமாவில் இருக்கிறேன்.
அவருக்கு அரசியல் தவிர எதுவும் தெரியாது. அதே போல் எனக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, கனிமொழி அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனபோதிலும் நான் எந்த ஊர் கோவில்களுக்கு சென்றாலும் அவரை சார்ந்தவர்கள் தான் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.