நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

'பரமசிவன் பாத்திமா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சேஷ்விதா கனிமொழி. விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். தற்போது 'குற்றம் புதிது' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நோகா ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புதுமுகம் இயக்குகிறார். தருண் விஜய் என்ற புதுமுகம் இதில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சேஷ்விதா நடிக்கிறார்.
இவர்களுடன் மதுசூதனராவ், நிழல்கள் ரவி, ராமசந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கரன் கிருபா இசை அமைத்துள்ளார்.
சேஷ்விதா கூறும்போது "பரமசிவன் பாத்திமா படம் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. 'மார்கன்' படம் நடிக்க நல்ல வாய்ப்பு கொடுத்தது. ஆனால் இந்த படம்தான் எனது முதல் படம். ஆடிசன் மூலம் தேர்வானேன். 3 மாதங்கள் வரை பயிற்சி எடுத்து நடித்தேன். இதில் தந்தை - மகளுக்கு இடையிலான உறவை சொல்லும் பகுதியில் மகளாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு மெடிக்கல் த்ரில்லர் படம். தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறது என்றார்.