வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
முண்டாசுப்பட்டி, ராட்சன் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் புதிய படம் கடந்த வருடத்தில் இருந்து உருவாகி வருகிறது. நீண்ட மாதங்களாக இதன் படப்பிடிப்பு நாட்கள் நீண்டு கொண்டே சென்றது. இதனால் ராம்குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து சத்யஜோதி நிறுவனம் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் விஷ்ணு விஷால் அவரது வி.வி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை கையில் எடுத்து தயாரித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.