விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'அமரன்' திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விஜய்யின் 'தி கோட்' படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதில் விஜய் சிவகார்த்திகேயனிடம் 'துப்பாக்கிய பிடிங்க சிவா' என பேசிய வசனம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியருக்கு மைலேஜாக அமைந்தது.
இந்த நிலையில் அமரன் படத்தின் வெற்றிக்காக சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் கூறியதாவது, "ஷூட்டிங்கிற்கு முதல் நாள் தி கோட் படத்திற்கான சீன் பேப்பர் கொடுத்தனர். இதை பார்த்துகொங்க சுடக்கூடாது என்று தான் வெங்கட் பிரபு வசனம் எழுதியிருந்தார். ஆனால், விஜய் தான் அதை மாற்றி துப்பாக்கியை பிடிங்க சிவா என பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது அவர் எனக்கு தந்த அன்பாக மட்டுமே பார்க்கிறேன் ". என இவ்வாறு பகிர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.