அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'அமரன்' திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விஜய்யின் 'தி கோட்' படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதில் விஜய் சிவகார்த்திகேயனிடம் 'துப்பாக்கிய பிடிங்க சிவா' என பேசிய வசனம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியருக்கு மைலேஜாக அமைந்தது.
இந்த நிலையில் அமரன் படத்தின் வெற்றிக்காக சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் கூறியதாவது, "ஷூட்டிங்கிற்கு முதல் நாள் தி கோட் படத்திற்கான சீன் பேப்பர் கொடுத்தனர். இதை பார்த்துகொங்க சுடக்கூடாது என்று தான் வெங்கட் பிரபு வசனம் எழுதியிருந்தார். ஆனால், விஜய் தான் அதை மாற்றி துப்பாக்கியை பிடிங்க சிவா என பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது அவர் எனக்கு தந்த அன்பாக மட்டுமே பார்க்கிறேன் ". என இவ்வாறு பகிர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.