ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் வெளியான பதான், ஜவான் படங்கள் தொடர்ச்சியாக ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தன. ஆரம்பகாலத்தில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளார் ஷாரூக். இந்நிலையில் துபாய் நடந்த நிகழ்ச்சியில் தனது தோல்விகள் பற்றி அவர் பேசியதாவது : ‛‛தோல்விகளுக்காக ஒரு நாளும் அழக்கூடாது. அதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எனக்கு ஏற்பட்ட தோல்விகளை நினைக்கையில் வெறுப்பாக உள்ளது. நான் பாத்ரூமில் அழுதிருக்கிறேன். அதை யாரிடமும் வெளிகாட்டியதில்லை.
இந்த உலகம் உங்களுக்கு எதிராக இல்லை என நம்ப வேண்டும். விரக்தி இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மட்டுமே தவறு நடக்கிறது என நம்பக்கூடாது. வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும். அது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். அதற்காக வாழ்க்கையை குறை கூற கூடாது'' என்றார்.