ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகை நயன்தாரா பற்றிய டாகுமென்டரியான 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்குக் கொடுத்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அது எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. கடந்த மாதம்தான் அது பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன்படி இன்று நவம்பர் 18ம் தேதி வெளியாகி உள்ளது. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த டாகுமென்டரியின் டிரைலரில் 'நானும் ரௌடிதான்' படத்தின் 3 வினாடி படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி சேர்த்ததற்காக அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து நடிகை நயன்தாராவிற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நயன்தாரா. இந்த விவகாரம் திரையுலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரைலரில் இடம் பெற்ற 3 வினாடி படப்பிடிப்பு காட்சிகளுக்கே 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இன்று வெளியான டாகுமென்டரியில் சுமார் 10 வினாடி 'நானும் ரௌடிதான்' படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 3 வினாடிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தனுஷ், இந்த 10 வினாடி காட்சிகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.