ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகை நயன்தாரா பற்றிய டாகுமென்டரியான 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்குக் கொடுத்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அது எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. கடந்த மாதம்தான் அது பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன்படி இன்று நவம்பர் 18ம் தேதி வெளியாகி உள்ளது. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த டாகுமென்டரியின் டிரைலரில் 'நானும் ரௌடிதான்' படத்தின் 3 வினாடி படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி சேர்த்ததற்காக அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து நடிகை நயன்தாராவிற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நயன்தாரா. இந்த விவகாரம் திரையுலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரைலரில் இடம் பெற்ற 3 வினாடி படப்பிடிப்பு காட்சிகளுக்கே 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இன்று வெளியான டாகுமென்டரியில் சுமார் 10 வினாடி 'நானும் ரௌடிதான்' படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 3 வினாடிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தனுஷ், இந்த 10 வினாடி காட்சிகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.