ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்த சமந்தா, தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு 'மயோசிட்டிஸ்' என்ற நோய்க்கான சிகிச்சையிலும் ஈடுபட்டு வருபவர், தற்போது 'சிட்டாடல்' வெப் தொடரில் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கூறும்போது, அம்மாவாக வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, ஒரு பெண் தாயாவது ஒரு அழகான அனுபவம். அதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். பெரும்பாலான பெண்கள் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். என்னை பொறுத்தவரை குழந்தை பெற்றெடுக்க வயது ஒரு தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண் தாயாகலாம் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.