புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் |
தமிழில் சூர்யா நடிப்பில் இயக்கிய ‛சூரரைபோற்று' படத்தை ஹிந்தியில் ‛சர்பிரா' என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்தார் சுதா கொங்கரா. அதன்பிறகு சூர்யா நடிப்பில் ‛புறநானூறு' படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டதால் அந்த கதையை சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி ஓகே பண்ணி இருந்தார் சுதா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக ஒரு நெகட்டீவ் ரோலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நடிக்க வைக்க முயற்சி எடுத்தார். ஆனால் அவர் படம் இயக்குவதில் பிசியாக இருப்பதாக மறுத்து விடவே அதன் பிறகு அந்த வேடத்தில் அதர்வா நடிப்பதாக கூறப்பட்டது.
இப்போது அமரன் படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு புறநானூறு பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டு வரும் சுதா, அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் மோதும் வில்லனாக ஒரு முன்னணி ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் . அதற்காக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதோடு இந்த புறநானூறு படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா படமாக இயக்குகிறார் சுதா கொங்கரா.