இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, ராம்சரண் இருவரும் தற்போது தங்களின் அடுத்தடுத்த படங்களின் வேளைகளில் பிஸியாக இருக்கின்றனர். ராஜமவுலி இயக்கத்தில் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதேபோல ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இவர்கள் இருவரும் தங்களது மனைவி, குழந்தைகளுடன் குடும்பமாக வெளிநாட்டு பயணங்கள் சென்று வந்துகொண்டு தான் இருந்தனர். இந்த நிலையில் ராம்சரண் மனைவி உபாசனா மற்றும் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் ஆகியோர் தங்களது இன்னும் சில தோழிகளுடன் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் கிளம்பி சென்றுள்ளனர். கணவர்கள் உள்ளூரில் வேலையில் பிஸியாக இருக்க, இவர்கள் மாலத்தீவில் தோழிகளுடன் ஜாலியாக பொழுதுபோக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.