எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் |

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, ராம்சரண் இருவரும் தற்போது தங்களின் அடுத்தடுத்த படங்களின் வேளைகளில் பிஸியாக இருக்கின்றனர். ராஜமவுலி இயக்கத்தில் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதேபோல ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இவர்கள் இருவரும் தங்களது மனைவி, குழந்தைகளுடன் குடும்பமாக வெளிநாட்டு பயணங்கள் சென்று வந்துகொண்டு தான் இருந்தனர். இந்த நிலையில் ராம்சரண் மனைவி உபாசனா மற்றும் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் ஆகியோர் தங்களது இன்னும் சில தோழிகளுடன் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் கிளம்பி சென்றுள்ளனர். கணவர்கள் உள்ளூரில் வேலையில் பிஸியாக இருக்க, இவர்கள் மாலத்தீவில் தோழிகளுடன் ஜாலியாக பொழுதுபோக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.