கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
நடிகராக மட்டும் அல்லாது இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் தனுஷ். ப.பாண்டி, ராயன் படங்களுக்கு பிறகு தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து 'இட்லி கடை' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தேனி பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்கள், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் நாயகன் அருண் விஜய் என்றும், அவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கவுரவ தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.