கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

உலக செஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். அவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனால் அதற்கு விஸ்வநாதன் அனுமதி அளிக்காமல் இருந்தார்.
தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், பாலிவுட் எழுத்தாளர் சஞ்சய் திரிபாதியும் இணைந்து எழுதியுள்ள திரைக்கதைக்கு ஆனந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். மஹாவீர் ஜெயின், ஆஷிஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. 52 வயதான தற்போதைய விஸ்வநாதன் ஆனந்த் தோற்றத்தில் மாதவன் நடிப்பார் என்று தெரிகிறது. தற்போது ஏ.எல்.விஜய் மாதவன், கங்கனா ரனவத் நடிக்கும் 'லைட்' என்ற படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாக்கி வருகிறார்.
மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். 1988ல் இந்தியாவுக்கு முதல் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். 5 முறை உலக சாம்பியன், 2 முறை உலகக்கோப்பை செஸ் சாம்பியன் உள்பட பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் அவர் மூலமாகவே இந்தியாவில் செஸ் போட்டி பிரபலமானது.