சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

உலக செஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். அவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனால் அதற்கு விஸ்வநாதன் அனுமதி அளிக்காமல் இருந்தார்.
தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், பாலிவுட் எழுத்தாளர் சஞ்சய் திரிபாதியும் இணைந்து எழுதியுள்ள திரைக்கதைக்கு ஆனந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். மஹாவீர் ஜெயின், ஆஷிஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. 52 வயதான தற்போதைய விஸ்வநாதன் ஆனந்த் தோற்றத்தில் மாதவன் நடிப்பார் என்று தெரிகிறது. தற்போது ஏ.எல்.விஜய் மாதவன், கங்கனா ரனவத் நடிக்கும் 'லைட்' என்ற படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாக்கி வருகிறார்.
மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். 1988ல் இந்தியாவுக்கு முதல் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். 5 முறை உலக சாம்பியன், 2 முறை உலகக்கோப்பை செஸ் சாம்பியன் உள்பட பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் அவர் மூலமாகவே இந்தியாவில் செஸ் போட்டி பிரபலமானது.