கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

10 ஆண்டுகளுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட தடை கோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'இரண்டாம் குத்து' படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் (பிசாசு 2 தயாரிப்பாளர்) பாக்கி வைத்திருந்தது. ஐகோர்ட் உத்தரவுப்படி இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சம் மற்றும் ஜி.எஸ்.டி. தொகை 31 லட்சம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டும் பணத்தை தரவில்லை. எனவே, பிசாசு-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'பிசாசு-2' திரைப்படத்தை வெளியிட தடை விதித்தது. மேலும், இந்த மனு தொடர்பாக ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது.