கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்களில் ஒருவர் விஜய். அவரது கடைசி சில படங்கள் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தவை. 'லியோ' படம் 600 கோடி வசூலித்தது என்றும், கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 'தி கோட்' படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என்பதும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அவருடைய கடைசி 3 படங்களின் பட்ஜெட் மட்டுமே 300 கோடியை நெருங்கி வந்தவை என்கிறார்கள். 'தி கோட்' படத்தின் பட்ஜெட்டே 400 கோடி என்ற ஒரு தகவல் கோலிவுட்டில் உலா வந்தது. அப்படியென்றால் அவரது கடைசி படமாக உருவாகி வரும் 69வது படத்தை எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக எடுக்க வேண்டும். அவருடைய கடைசி படம் என்பதற்காகவே அந்தப் படத்தை அனைத்து விஜய் ரசிகர்களும் கண்டிப்பாகப் பார்த்துவிடுவார்கள். அவர்கள் அனைவரும் வந்து பார்த்தாலே 600 கோடியைக் கண்டிப்பாகக் கடந்துவிடும். அப்படியென்றால் படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடியாவது இருக்க வேண்டாமா ?.
இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான 69வது படத்தின் பட்ஜெட் சிறியது என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க அணுகி இருக்கிறார்கள். அவர் தற்போது வாங்கி வரும் சம்பளத்தைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அது பெரிய தொகை, தங்களால் தர முடியாது, இது சிறிய பட்ஜெட் படம் என தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதனால், சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள்.
'தி கோட்' படத்தை விடவும் குறைந்த பட்ஜெட்டிலா இப்படத்தை எடுக்கிறார்கள் என கோலிவுட்டில் ஆச்சரியப்படுகிறார்கள். விஜய் 69வது படத்தை கர்நாடகாவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தனது கடைசி படத்தை தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்குத் தராமல் வேற்று மொழி தயாரிப்பாளர்களுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தது இங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது படத்தின் பட்ஜெட் விவகாரம் வெளியில் கசிந்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.