ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்தையே வெற்றி படமாக்கினார். அதன்பிறகு இவர் இயக்கத்தில் உருவான படம் ‛நரகாசுரன்'. 2017ல் உருவான இந்தப்படம் நிதி சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் 7 ஆண்டுகளாக இன்னும் வெளியாகவில்லை. அதன்பின் இவரது இயக்கத்தில் வெளியான ‛மாபியா, மாறன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
அதன்பின் இவர் இயக்கத்தில் உருவான படம் ' நிறங்கள் மூன்று'. இதில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் இணைந்து பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2022ல் இந்த படம் துவங்கி கடந்தாண்டே ரிலீஸிற்கு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கும் ஒரு சில காரணங்களால் ஏற்பட்ட பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. இப்போது பிரச்னைகளை தீர்த்து ஒருவழியாக ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 22ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.