‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதல் வசப்பட்டனர். சில வருடங்கள் தங்களது காதலை வலுவாக்கிக் கொண்டு, கடந்த 2022 ஜூன் மாதம் திருமணத்தில் இணைந்தனர். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த இரண்டு குழந்தைகளுடனுமான தங்களது சந்தோஷ நிகழ்வுகளை அவ்வப்போது தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சோசியல் மீடியாவில் பதிவுகளாக வெளியிடத் தவறுவதில்லை.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணம் நடைபெற்ற மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டான் கோல்ட் சென்னை ரிசார்ட்டுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விசிட் அடித்துள்ளனர். இது குறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் கூறும்போது, “எங்களது திருமணம் நடைபெற்ற அதே இடத்திற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிறோம். மீண்டும் அதேபோல இங்கே கிடைக்கப் போகும் மறக்க முடியாத தருணங்களுக்காக எங்களால் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.