அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானவர் என்றாலும் தனது நடிப்புத் திறமையால் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு அப்படியே பாலிவுட் வரை தன் எல்லையை விரிவு செய்து விட்ட துல்கர் சல்மான் எல்லா மொழிகளிலும் வருடத்திற்கு ஒரு படம் என்கிற கணக்கில் நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் துல்கர் சல்மான் ஒரு பேட்டியில் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை ஒரு படம் தோல்வி அடைகிறது என்றால் அது என்னுடைய பொறுப்பு தான்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான 'கிங் ஆப் கொத்த' என்கிற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறி அதிர்ச்சி அளித்தது. இத்தனைக்கும் துல்கர் சல்மான் இந்த படத்தை சொந்தமாக தயாரித்து இருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு அவர் மலையாளத்தில் புதிய படங்கள் எதுவும் நடிக்கவில்லை. அந்த படத்திற்கான தோல்விக்கு தான் மட்டுமே பொறுப்பு என்று கூறியுள்ள துல்கர் சல்மான் அந்தப் படத்தின் இயக்குனராக அறிமுகமாகிய தனது நண்பர் அபிலாஷ் ஜோஷி திறமையானவர் என்றும், இன்னொரு படத்தின் மூலம் அவர் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.