பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக கூறி வந்தார். ஆனால் உடனடியாக அவரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனை சந்தித்து அவர் கதை சொன்ன போது, அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்தவர், தான் ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் சில படங்களை பட்டியல் போட்டுள்ளார் .
அதாவது தற்போது நடித்துள்ள அமரன் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் இதையடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் எனது 23 வது படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தை முடித்த பிறகு டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு ஆகிய படங்களில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருப்பதை தெரிவித்த சிவகார்த்திகேயன், கைவசம் உள்ள மூன்று படங்களையும் முடித்த பிறகு தான் உங்கள் இயக்கத்தில் நடிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாகவே அதுவரைக்கும் சிவகார்த்திகேயனுக்காக வெயிட் பண்ண வேண்டாம் என்று வேறு சில நடிகர்களை சந்தித்து கால்ஷீட் கேட்டு வருகிறார் வெங்கட் பிரபு .