‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மலையாள திரை உலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த சந்தனா, அதன் பிறகு மலையாள பின்னணி பாடகியான அம்ருதா சுரேஷ், அதன் பின்னர் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என கடந்த 2008லிருந்து திருமணம் செய்வதும் பின்னர் அவர்களிடம் இருந்து விவாகரத்து பெறுவதுமாக இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்தும் பெற்று விட்டார். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது முறைப் பெண்ணான கோகிலா என்பவரை சமீபத்தில் நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகர் பாலா. இதுதான் தனது கடைசி திருமணம் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவரது மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத் தற்போது சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடிகர் பாலா மீது ஏதாவது குற்றச்சாட்டுகளை அடுக்குவார் என பார்த்தால் நமக்கு ஏமாற்றமே..
அந்த வீடியோவில் எலிசபெத் கூறும்போது, “நான் சில விஷயங்கள் பற்றி கேள்விப்பட்டேன். அதை இந்த வீடியோவில் சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நான் வருத்தப்பட்டது உண்மை. என்றாலும் அது பற்றி இங்கே விவாதிக்க விரும்பவில்லை. அதேசமயம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நான் இப்போது அகமதாபாத்தில் இருக்கிறேன். அங்கே ஒரு நோயாளியின் வாழ்க்கையில் சிகிச்சை அளித்து தக்க சமயத்தில் காப்பாற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன். அவர்கள் எனக்கு நிறைய சாக்லேட் மற்றும் இனிப்புகளை பரிசாக கொடுத்தார்கள். நான் செய்தது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் சிலர் அது குறித்து தங்களது அன்பை வெளிப்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில விஷயங்களால் வருத்தமாக இருந்த நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.