Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அனுமதியின்றி பலாத்காரம் செய்தார் ; நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி குற்றச்சாட்டு

24 பிப், 2025 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Balas-ex-wife-Elizabeth-Udayan-alleges-he-abused,-raped-me,-says:-I-am-afraid-of-his-gundas


இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா, சிவாவுக்கு முன்பே திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர். பின்னர் தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டு மலையாள படங்கள் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார். கதாநாயகனாக, வில்லனாக என அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தொடர்ந்து அவ்வப்போது சர்ச்சைகளின் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார் பாலா. அதுவும் அடிக்கடி திருமணம் மற்றும் திருமண முறிவு சர்ச்சைகளில் தான் இவரது பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா. இதற்கு முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த சந்தனா சதாசிவம் என்பவரையும் அவருக்குப் பிறகு பின்னணி பாடகியான அம்ருதா சுரேஷ் என்பவரையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் அவர்களிடம் இருந்து பிரிந்தார் பாலா. மூன்றாவதாக டாக்டர் எலிசபெத் உதயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்கள் கூட இவர்களது மண வாழ்க்கை நீடிக்கவில்லை.

பாலாவின் நான்காவது திருமணம் குறித்து மூன்றாவது மனைவியான எலிசபெத் பெரிய அளவில் குற்றச்சாட்டுகளையோ அதிருப்தி கருத்துக்களையோ வெளியிடவில்லை. அதேசமயம் பாலாவின் ரசிகர்கள் என்கிற போர்வையில் எலிசபெத்தின் சோசியல் மீடியா பக்கத்தில் அவரைப் பற்றி தரக்குறைவாக பலர் பேசி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பாலாவுடன் தான் பழகி வந்த சமயத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில நேரங்களில் தன்னுடைய அனுமதி இன்றி தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் பாலா என பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார் எலிசபெத்.

“மேலும் அதன் பிறகு போலீசார் என்னையும் என் தந்தையையும் மிரட்டினார்கள். எங்கள் திருமணமே போலீசார் முன்னிலையில் தான் நடைபெற்றது. ஆனால் அந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய பாலா குடும்பத்தினர் விரும்பவில்லை. அதற்கு காரணமாக ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி காலத்தை கடத்தினார்கள். அதனாலேயே தற்போது என்னுடன் உறவை எளிதாக முறித்துக் கொண்டு வேறு திருமணம் செய்து விட்டார். ஆனால் இப்படி தனக்கு வேண்டிய நபர்கள் மூலமாக என் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால் நாங்கள் ஒன்றாக இருந்த போது பாலா என்னை அடித்து கொடுமைப்படுத்தியது மோசமான வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிடுவேன்” என்று எச்சரித்துள்ளார் எலிசபெத்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டில்லி படப்பிடிப்பில் மம்முட்டியுடன் இணைந்த மோகன்லால்டில்லி படப்பிடிப்பில் ... மஞ்சு வாரியர் பற்றி தவறாக பேசினேனா ? திலீப்பின் நட்பு இயக்குனர் மறுப்பு மஞ்சு வாரியர் பற்றி தவறாக பேசினேனா ? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in