என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பிரபல ஹீரோக்கள் நடித்து பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட்டான படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவது தொடர்ந்து வாடிக்கையாகிவிட்டது. தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட மணிசித்திரதாழ், ஸ்படிகம், தேவதூதன் உள்ளிட்ட சில படங்கள் இது போன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது மம்முட்டி நடிப்பில் கடந்த 1986ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆவநாழி திரைப்படம் தற்போது 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இயக்குனர் ஐ.வி சசி இயக்கிய இந்த படத்தில் கதாநாயகிகளாக கீதா மற்றும் நளினி ஆகியோர் நடித்திருந்தனர். மலையாள திரையுலகில் 20 திரையரங்குகளில் தொடர்ந்து 25 நாட்கள் ஓடிய இந்த திரைப்படம் 100 நாள் வெற்றி படமாகவும் அமைந்தது. போலீஸுக்கும் அரசியல்வாதிக்குமான மோதல் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 1987ல் தமிழில் நடிகர் கமல்ஹாசன், சந்தான பாரதி இயக்கத்தில் இந்த படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கிற பெயரில் தயாரித்தார். இதில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க மலையாளத்தில் நடித்த கீதா மற்றும் நளினி இருவருமே இதிலும் நடித்திருந்தனர். இங்கேயும் இந்தப்படம் வெற்றி பெற்றது.
மேலும் அதே வருடத்தில் தெலுங்கில் கிருஷ்ணம் ராஜு நடிப்பில் டெத் சென்டன்ஸ் என்கிற பெயரிலும் ஹிந்தியில் வினோத் கன்னா நடிப்பில் சத்தியமேவ ஜெயதே என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.