‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு | நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் |
ஒரு சில நடிகைகள் மட்டுமே பிரபல நாவல் கதைகளில் நடித்துள்ளனர். லட்சுமி, சாரதா, சரிதா இப்படி ஒரு சில நடிகைகளை குறிப்பிடலாம். ஜெயலலிதாவும் ஒரு சில நாவல்கதைகளில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது 'நதியை தேடி வந்த கடல்'. பிரபல எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவல் அதே தலைப்பில் படமானது.
இதில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக சரத்பாபு நடித்திருந்தார். படாபட் ஜெயலட்சுமி. ஸ்ரீகாந்த், மாஸ்டர் சேகர், ஜமீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதியிருந்தார். முன்னணி எடிட்டரான பி.லெனின் இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு முன்பு ஜெயலலிதா நடித்த 'மாற்றான் தோட்டத்து மல்லிகை', 'மணிப்பூர் மாமியார்' படங்கள் வெளியாகவில்லை. அதனால் இதுவே ஜெயலலிதாவுக்கு கடைசி படமானது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 'தவிக்குது தவிக்குது ஒரு மனது..' என்ற பாடல் இப்போதும் தேன் சொட்டும் பாடலாக ரசிக்கப்படுகிறது. அதில் ஜெயலலிதா ஆடியிருக்கும் நடனமும் மனதை கொள்ளை கொள்ளும்.