முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி | நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார் | இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், விஜய் நாயகனாக நடித்து செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. இப்படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. தமிழகத்தில் 100 கோடி ஷேர் வந்ததற்கும் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.
தற்போது படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். “நன்றி தலைவா, 'தி கோட்' படத்தைப் பார்த்து அழைத்தற்கும், அன்பை வெளிப்படுத்தியதற்கும் நன்றி. முழு மனதுடன் பாராட்டியதற்கு மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றியுடன், எல்லா அன்பையும் உங்களுக்கு அனுப்புகிறேன்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
'தி கோட்' படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகும், 45 நாட்களைக் கடந்து இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.




