தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் வட இந்தியாவிலும் பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. அவற்றின் வெற்றி தெலுங்குத் திரையுலகத்தையே மாற்றியது.
ராஜமவுலி இந்திய அளவில் பெரிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார். தெலுங்கில் மட்டுமே தனது வியாபார வட்டத்தை வைத்திருந்த பிரபாஸ் அதன்பின் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். ராஜமவுலி இயக்கத்தில் அடுத்த வந்த 'ஆர்ஆர்ஆர்' படமும் அதே போல பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் நடித்த ராம் சரண், ஜுனியர் என்டிஆர் பான் இந்தியா பிரபலமாகினார். அப்படத்தின் பாடலும் ஆஸ்கர் விருதை வென்றது.
'பாகுபலி 2' படம் வெளிவந்த பின்பே 'பாகுபலி 3' பற்றிய பேச்சுக்களும் எழுந்தது. ஆனால், அது எப்போது உருவாகும் என்பது குறித்த நிலையான தகவல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 'பாகுபலி 1' படத்தை தமிழகத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பாகுபலி' தயாரிப்பாளர்களிடம் பேசிய போது அவர்கள் 'பாகுபலி 3' பற்றி திட்டமிட்டு வருகிறார்கள் என்பது தெரிந்தது என்று கூறியுள்ளார்.
ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளார். அந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிட்ட பின்பு 'பாகுபலி 3' பட வேலைகளில் இறங்கலாம் எனத் தெரிகிறது.