அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நேரடி வாரிசு என்று யாரும் இல்லை. அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார், எம்ஜிஆரின் வாரிசு என்று அறிவித்துக் கொண்டு சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட எம்ஜிஆரின் தோற்றத்தை கொண்டிருந்தார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவரால் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.
காரணம் அவர் சினிமாவுக்கு வந்தது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது “நான் யார் சிபாரிசும் இல்லாமல் சுயமாக ஜெயித்தேன். எனது வாரிசும் அப்படியே ஜெயிக்க வேண்டும் என்ற விரும்புகிறேன். அப்படி அவன் ஜெயித்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது நான்தான்” என்று கூறினார்.
எம்.ஜி.சக்கரபாணிக்கு 7 மகன்கள், அதில் இவர் 5வது மகன். சென்னை, மைலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து அதில் டிப்ளமோ பெற்றவர். ஆனால் அவருக்கு சித்தப்பா எம்.ஜி.ஆர் போல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. 'மீனவன் மகன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நின்று போனது. அதன்பிறகு “குங்குமம் கதை சொல்கிறது” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை அப்போதைய பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். படாபட் ஜெயலட்சுமி ஜோடியாக நடித்தார். தொடர்ந்து போர்க்களம், கரடி, அவள் ஒரு கவரிமான் போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பிறகு அவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. நடிகை படாபட் ஜெயலட்சுமியின் தற்கொலைக்கு எம்.ஜி.சுகுமாருடன் இருந்த காதலும், பிரிவும்தான் என்று கூறப்பட்டது. இது எம்.ஜி.சுகுமாரின் கேரியரை பாதித்தது. எம்.ஜி.ஆரும் அவரை சுத்தமாக ஒதுக்கி வைத்தார். எம்ஜிசி. சுகுமார், தனது 60வது வயதில் காலமானார்.