முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' | கார் ரேஸ் : அஜித்திற்கு குவியும் வாழ்த்துகள் | மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் | வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் | பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்” | பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை சேர்ந்தவர்: நடிகர் ராம்சரண் கொடுத்த 'க்ளூ' | பவன் கல்யாண் பட அக்ரிமெண்டில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்த நிதி அகர்வால் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நேரடி வாரிசு என்று யாரும் இல்லை. அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார், எம்ஜிஆரின் வாரிசு என்று அறிவித்துக் கொண்டு சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட எம்ஜிஆரின் தோற்றத்தை கொண்டிருந்தார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவரால் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.
காரணம் அவர் சினிமாவுக்கு வந்தது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது “நான் யார் சிபாரிசும் இல்லாமல் சுயமாக ஜெயித்தேன். எனது வாரிசும் அப்படியே ஜெயிக்க வேண்டும் என்ற விரும்புகிறேன். அப்படி அவன் ஜெயித்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது நான்தான்” என்று கூறினார்.
எம்.ஜி.சக்கரபாணிக்கு 7 மகன்கள், அதில் இவர் 5வது மகன். சென்னை, மைலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து அதில் டிப்ளமோ பெற்றவர். ஆனால் அவருக்கு சித்தப்பா எம்.ஜி.ஆர் போல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. 'மீனவன் மகன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நின்று போனது. அதன்பிறகு “குங்குமம் கதை சொல்கிறது” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை அப்போதைய பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். படாபட் ஜெயலட்சுமி ஜோடியாக நடித்தார். தொடர்ந்து போர்க்களம், கரடி, அவள் ஒரு கவரிமான் போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பிறகு அவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. நடிகை படாபட் ஜெயலட்சுமியின் தற்கொலைக்கு எம்.ஜி.சுகுமாருடன் இருந்த காதலும், பிரிவும்தான் என்று கூறப்பட்டது. இது எம்.ஜி.சுகுமாரின் கேரியரை பாதித்தது. எம்.ஜி.ஆரும் அவரை சுத்தமாக ஒதுக்கி வைத்தார். எம்ஜிசி. சுகுமார், தனது 60வது வயதில் காலமானார்.