என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த வேட்டையன் படம், நான்கு நாட்களில் 240 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக நேற்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் சமீபத்தில் உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் அவரது வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை அகற்றினார்கள்.
மூன்று தினங்களுக்கு பிறகு வீடு திரும்பிய ரஜினி தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். மேலும், கூலி படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென்று ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதற்கு முன்கூட்டியே தனக்கு இப்படி ஒரு சிகிச்சை இருப்பதாக ரஜினி எங்கள் இடத்தில் தெரிவித்துவிட்டார். அதனால் திடீரென்று அவருக்கு நலக்குறைவு ஏற்படவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி சார் ஏற்கனவே தனக்கு சிகிச்சை இருப்பதாக சொல்லிவிட்டதால் அந்த காலகட்டத்தில் வேறு நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. என்றாலும் அக்டோபர் 16ம் தேதி முதல் ரஜினி மீண்டும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அடுத்தபடியாக அவரது காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட உள்ளது என்று தெரிவித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்த கூலி படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்.