25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ் நடிகையான ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். 2018ம் ஆண்டு துபாயில் நடந்த ஒரு விழாவுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் அறையில் தவறி விழுந்து இறந்தார். ஸ்ரீதேவி நினைவாக அவர் வாழ்ந்த லோகந்த் வாலாவில் உள்ள ஒரு பகுதிக்கு 'ஸ்ரீதேவி சவுக்' என்று பெயரிடப்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது.
அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லோகந்த் வாலாவில் 'ஸ்ரீதேவி கபூர் சவுக், திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது இளைய மகள் குஷி கபூர் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.