22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மாநகரம் என்ற படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அதன்பிறகு கைதி , மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கினார். தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் . அப்போது அவரிடத்தில், வெட்டு, குத்து, ரத்தம் இல்லாமல் காதல் கதையில் எப்போது படம் எடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு...
அவர் பதில் அளிக்கையில், தற்போது நான் எடுக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவதால் அதே கோணத்தில் யோசித்து வருகிறேன். கூலி படத்தை அடுத்து விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் வேடத்தை இன்னும் பெரிய அளவுல டெவலப் பண்ணி ஒரு படம் எடுக்க போறேன். அதுக்கு அப்புறம் கைதி 2 எடுக்க போறேன். இது மாதிரி நான் கமிட் ஆயிருக்கிற படங்களை இயக்கி முடிப்பதற்கு இன்னும் 5 வருஷம் ஆயிடும். அதனால அதன்பிறகு ரொமான்ஸ் காதல் கதையில் படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.