மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் 'வாடிவாசல்' ? | 'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! |
'ஆர்ஆர்ஆர்' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் 'தேவரா'. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டார்கள். பத்து நாட்களில் இப்படம் 466 கோடி வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் 'தேவரா' படத்தின் வரவேற்பு குறித்தும், வசூல் குறித்தும் என்டிஆர் பேசியுள்ளார். படம் மிகப் பெரிய வசூலையும், வெற்றியையும் பெறாதது குறித்து தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய ரசிகர்கள் ஒரு படத்தை அதிகமாகக் கிண்டலடிக்கிறார்கள், அவர்கள் படத்தை பொழுதுபோக்காகப் பார்ப்பதில்லை. அதை அதிகமாக ஆராய்ந்து, விமர்சன ரீதியாகப் பார்க்கிறார்கள். இதுதான் பல படங்கள் குறைவான வரவேற்பைப் பெறக் காரணமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.