இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
கொரோனா தாக்கத்திற்குப் பிறகு எந்தத் துறை பாதிக்கப்பட்டதோ இல்லையோ, சினிமாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த 2020ம் ஆண்டில் ஒடிடி தளங்களுக்கு திடீரென ஒரு வரவேற்பு கிடைத்தது. கொரோனா பாதிப்பால் தியேட்டர்களை மூடியதால், பொழுதுபோக்கிற்காக ஓடிடி பக்கம் போனார்கள் மக்கள். அதனால், பல படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாகவே வெளியானது.
தியேட்டர்களில் வெளியான பின்னும் அப்படங்களுக்கு ஓடிடி தளங்களில் நல்ல விலையும் கிடைத்தது. ஆனால், தற்போது ஓடிடி நிறுவனங்கள் பல படங்களை வாங்க முன்வருவதில்லை என தயாரிப்பாளர்கள் நொந்து போய் உள்ளார்களாம். முன்னணி நடிகர்களின் படங்கள், மற்றும் தியேட்டர்களில் வசூலைக் குவிக்கும் படங்களை மட்டுமே அவர்கள் வாங்குகிறார்களாம். மற்ற படங்களை அவர்கள் சீண்டுவதேயில்லையாம்.
ஓடிடி தளங்களின் நிலைமை இப்படியிருக்க, சாட்டிலைட் டிவிக்களில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கான விலையும் மிகவும் குறைந்துவிட்டதாம். ஓடிடியில் வெளியான படங்களை டிவியில் ஒளிபரப்பினால் மக்கள் பார்ப்பதில்லை, அதனால், விளம்பரங்களும் கிடைப்பதில்லை என டிவிக்காரர்கள் புலம்புகிறார்களாம்.
ஒரு காலத்தில் சாட்டிலைட் உரிமை மூலம் நல்ல வருவாய் கிடைத்த தயாரிப்பாளர்களுக்கு, கடந்த சில வருடங்கள் மூலம் ஓடிடி தளங்கள் மூலமும் நல்ல வருவாய் கிடைத்தது. தற்போது அவையிரண்டுமே குறைந்து வருவதால் தியேட்டர் வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறார்களாம்.
தியேட்டர்களிலும் சிறிய படங்களுக்கு வரவேற்பு இல்லை என்று சொல்லி அதற்கும் காட்சிகளைத் தர மறுக்கிறார்களாம். தமிழ் சினிமாவின் இப்படியான சூழல் மாறுமா அல்லது இப்படியே நீடிக்குமா என்ற கவலையில் பல தமிழ் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று வேதனையுடன் சொல்கிறார்கள்.