சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அக்டோபர் 3ம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 13ம் தேதி வரை மைசூரு நகரில் நடைபெறுகிறது. அதன் கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 'யுவ தசரா' என்ற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதில் நாளை அக்டோபர் 9ம் தேதி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரியும், அக்டோபர் 10ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடைபெற உள்ளது. உட்டனஹள்ளி ரிங் ரோடில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய இசை நிகழ்ச்சி குறித்து ஏஆர் ரஹ்மான், “அக்டோபர் 9, யுவதசரா 2024 நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மைசூரு தசரா விழாவில் சாமுண்டீஸ்வரி அனுக்கிரகத்தில், முதல் முறையாக நவராத்திரி விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என இளையராஜா கன்னடத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.