'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அக்டோபர் 3ம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 13ம் தேதி வரை மைசூரு நகரில் நடைபெறுகிறது. அதன் கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 'யுவ தசரா' என்ற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதில் நாளை அக்டோபர் 9ம் தேதி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரியும், அக்டோபர் 10ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடைபெற உள்ளது. உட்டனஹள்ளி ரிங் ரோடில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய இசை நிகழ்ச்சி குறித்து ஏஆர் ரஹ்மான், “அக்டோபர் 9, யுவதசரா 2024 நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மைசூரு தசரா விழாவில் சாமுண்டீஸ்வரி அனுக்கிரகத்தில், முதல் முறையாக நவராத்திரி விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என இளையராஜா கன்னடத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.