இந்தவாரம் வரிசை கட்டும் படங்கள் : பிப்., 14ல் இவ்வளவு படங்கள் ரிலீஸா...! | ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க..: தனுஷின் ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' டிரைலர் வெளியீடு | பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா |
நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்கும் படங்களை தொடர்ந்து தயாரித்து வருபவர்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர். இதன் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர் பிரபு மற்றும் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இதன் கிளை நிறுவனமாக புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் என்கிற இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி 'மாயா, மாநகரம், மான்ஸ்டர், இறுதிச்சுற்று என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பொடென்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக்' திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசும்போது “இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த 'பிளாக்' படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன்” என்று கூறினார்.